தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்தியஅணியும், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், இரண்டாம்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. காயங்கள், இனவெறித் தாக்குதல் எனப்பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியஅணி பெற்ற இந்தச் சாதனை வெற்றியைஇந்தியரசிகர்கள் அப்போது சிறப்பாகக் கொண்டாடினார்கள். வெற்றியோடு ஊர் திரும்பியஇந்திய வீரர்களுக்கு உற்சாகவரவேற்பும் அளிக்கப்பட்டது. மேலும், இந்தியஅணிக்கு, இந்திய கிரிக்கெட்வாரியம் ஐந்து கோடிபரிசு அறிவித்தது.
இந்தியத் தொழிலதிபரும், மஹிந்திராகுழுமத்தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியமுகமது சிராஜ், ஷார்துல்தாக்கூர், சுப்மான்கில், நடராஜன், நவ்தீப்சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆறு இளம் வீரர்களுக்கு காரை பரிசளிக்கப்போவதாகஅறிவித்தார். மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான மஹிந்திரா தார் காரை, தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனந்த் மஹிந்திரா கூறியவாறே, இளம் வீரர்களுக்கு சமீபத்தில் கார் பரிசளிக்கப்பட்டது. இந்த நிலையில்நடராஜன் அந்த காரை, அவரது இந்திய அணி கனவு நிஜமாவதில்முக்கியப் பங்காற்றிய அவரது பயிற்சியாளரும், வழிகாட்டியுமானஜெயப்ரகாஷ்க்குபரிசளித்துள்ளார். இதனை ஜெயப்ரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடராஜன் மீண்டும் ஒருமுறை மனங்களை வென்றுவிட்டதாகரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர்.