அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழி நடத்திச் சென்றது பெருமை அளிக்கிறது. கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளர்.
232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் மிதாலி ராஜ் 7,805 ரன்களை எடுத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ்.