Advertisment

விஜய் வெளியே.. பிரித்வி ஷா உள்ளே - இந்திய அணியில் மாற்றங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில புதிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

Advertisment

indian

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் வெற்றிபெற்று, ஒரு நாள் தொடரை இழந்தது. இதையடுத்து, ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி சுலபமாக வெற்றி பெற்றிருந்தாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து அணி வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள சில மாற்றங்களை ஏற்படுத்தியது.

அதேபோல், இந்திய அணியிலும் சில மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகியோர் நாடு திரும்புகின்றனர். இளம் வீரரும், ஜூனியர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனுமான பிரித்விஷா மற்றும் ராஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் முத்திரை பதித்த அனுமா விஹாரி ஆகியோர் அவர்களது இடத்தை நிரப்பவுள்ளனர். இந்திய அணியில் பந்துவீச்சு பிரிவில் இருந்த குறை நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் இந்திய பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

sports England Cricket indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe