Skip to main content

பாராஒலிம்பிக்; இந்திய வீரர் வெண்கலம் வென்றது செல்லாது - ஒலிம்பிக் தொழில்நுட்ப குழு அறிவிப்பு!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

vinod kumar

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நிஷாத் குமார் உயரம் தூண்டுதலில் வெள்ளி வென்றார்.

 

ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார். அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

இந்தநிலையில் நேற்று வினோத் குமார், வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் வெண்கலம் வென்றார். ஆனால்  எஃப் 52 பிரிவில் பங்குபெற வினோத் குமார் தகுதியுடையவர் அல்ல என போட்டியில் பங்கேற்ற சிலர் குற்றச்சாட்டினை எழுப்பியதாக கூறப்படுகிறது.

 

இதனைத்தொடர்ந்து வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் வினோத் குமார் எஃப் 52 பிரிவில் பங்குபெற தகுதியுடையவர்தான என தொழில்நுட்ப குழு ஆய்வு செய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது எஃப் 52 பிரிவில் பங்குபெற வினோத் குமார் தகுதியுடையவர் அல்ல என தொழில்நுட்ப குழு அறிவித்ததோடு, அவரது வெண்கல பதக்கம் பெற்றதும் செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் வினோத் குமார் வெண்கல பதக்கத்தை இழந்துள்ளார்.