Skip to main content

"ராசா"வை சமாளிக்குமா இந்திய அணி?

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

rahul thavan

 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாவே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு தலைமை தாங்க முதலில் ஷிகர் தவான் நியமிக்கப்பட்ட நிலையில்  தற்போது காயங்களிலிருந்து மீண்ட கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியுள்ளதால் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

kl rahul

 


இவ்வணியில் முற்றிலும் புதுமுக வீரர்களே இடம் பெற்றுள்ளனர். 2016ம் ஆண்டு நடந்த ஜிம்பாவேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். தற்போது அதே அணிக்கு எதிராக கேப்டனாக களமிறங்க உள்ளார். ஐபிஎல்  போட்டிகளில் கேப்டனாக ராகுலின் வெற்றி சதவீதம் 47.62%. மொத்தம் 42 போட்டிகளில் 20 போட்டிகளில்  வெற்றியும் 20 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். 

கே.எல்.ராகுல் கேப்டனாக செயல் படுவதால் அவரும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஜிம்பாவே பயணிக்கும் இந்திய அணியில் ஷிகர் தவான் மட்டுமே அனுபவ ஆட்டக்காரர். மேலும் ஆசியப் போட்டிக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிக்க இளம் வீரர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.  அணியில் இடம்பிடித்த ராகுல் திரிபாதி தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வாஷிங்டன் சுந்தர்  காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் சபாஷ் அஹமத் இடம்பிடித்துள்ளார்.  


 

 

sikkendar rasa

 


பங்களாதேஷ் அணியுடன் மோதிய மூன்று  டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஜிம்பாவே.  காட்டுத்தனமான பார்மில் ஜிம்பாவே அணியின் கேப்டன் சிகேந்தர் ராசா உள்ளார். இரு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதை ராசா வென்றுள்ளார். ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் சேர்த்து 379 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இவரை சமாளித்தால் இந்திய அணியின் பாதி வெற்றி உறுதி.  

 

முதல் போட்டி நாளை ஜிம்பாவே ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஹராரே மைதானத்தில் 168 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில் 78 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 84 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளது. நாளை நடக்கும்  போட்டி  பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளிடமும் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது. இருந்தும் ஜிம்பாவே அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற வெற்றியை கருத்தில் கொண்டு பல இந்திய சீனியர்  வீரர்களும் ஜிம்பாவே அணியை சாதாரணமாக எடைபோட வேண்டாம் எனக் கூறுகின்றனர்.

 

உத்தேச இந்தியஅணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன் (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

 

உத்தேச ஜிம்பாப்வே அணி: மில்டன் ஷும்பா, இன்னசென்ட் கையா, ரெஜிஸ் சகாப்வா, டகுட்ஸ்வனாஷே கைடானோ, சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவரே, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டொனால்ட் டிரிபானோ, விக்டர் நியுச்சி, ரிச்சர்ட் ங்காராவா.

 

இரு அணிகளும் நேருக்கு நேராக 63 முறை விளையாடி உள்ளது. இதை 51 முறை இந்திய அணியும் 10 முறை ஜிம்பாவே  அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.