இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது. முதலில் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 112 ரன்களில் ஆட்டமிழந்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழந்தது. 49 ரன்கள் இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றியைச் சுவைத்தது. இதன் மூலம் இந்திய அணி தொடரில், 2வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.