இந்தியா- தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர் முழுமையாக ரத்து!

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவிட்டுள்ளன.

india vs south africa one day series cancel coronavirus bcci announced

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் நேற்று (12/03/2020) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா அச்சம் காரணமாக மீதமுள்ள இரு போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மார்ச் 15- ஆம் தேதி லக்னோவில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், மார்ச் 18- ஆம் தேதி கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

bcci announced india vs south africa match series cancel
இதையும் படியுங்கள்
Subscribe