உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்திய அணி 97/6 (32 ஓவர்) எடுத்துள்ளது. மகேந்திர சிங் டோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றன.