Skip to main content

11 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் போட்டி... ரசிகர்கள் பேரார்வம்!!!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

இந்திய கிரிக்கெட் அணி விராத் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதற்கட்டமாக அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 போட்டிகள் இந்தியா விளையாடுகிறது. 

 

india squad



 

 


இன்று இந்தியாவுக்கும், அயர்லாந்துக்கும் டப்ளின் நகரில் முதல் டி20 நடைபெறுகிறது. இதற்காக கடந்த சனிக்கிழமையே இந்திய அணி டப்ளின் வந்தடைந்தது. இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

அயர்லாந்து அணி கேரி வில்சன் தலைமையில் இந்திய வீரர்களுக்குச் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் நம்பிக்கை வீரர்களான வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரைன் ஆகியோரும் உள்ளனர். இந்திய வம்சாவளியான சிம்ரஞ்சித் சிங்(31) அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளராவார். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

2007 ஆம் ஆண்டு பெல்பாஸ்ட் நகரில் இந்தியவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரேயொரு, ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு 11 வருடங்கள் கழித்து இன்று இந்திய அணி அயர்லாந்துடன் விளையாட இருக்கிறது. இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே நான்கு போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளும், ஒரேயொரு டி20 போட்டியும் அடக்கம். இவை அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது.  

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.