INDIA VS ENGLAND ONE DAY MATCH IN PUNE

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Advertisment

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை எடுத்தது. பின்னர், 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 43.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

Advertisment

INDIA VS ENGLAND ONE DAY MATCH IN PUNE

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 108, ரிஷப் பந்த் 77, விராட் கோலி 66, ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 124, ஜேசன் ராய் 55, பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.