ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி!

india vs england cricket one day match india win the cup

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

india vs england cricket one day match india win the cup

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78, ஷிகர் தவான் 67, ஹர்திக் பாண்டியா 64 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் காரன் 95, டேவிட் மாலன் 50, லிவிங்ஸ்டன் 36 ரன்களை எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4, புவனேஷ்வர் குமார் 3, நடராஜன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3, ஆடில் ரஷீத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

india vs england cricket one day match india win the cup

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட், டி20 போட்டியுடன், ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

England Cricket India INDIA WIN Rohit sharma virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe