Advertisment

மீண்டும் சுழலில் சுருண்ட இங்கிலாந்து! - அதிர்ச்சி தொடக்கம் கண்ட இந்தியா!

india vs england

Advertisment

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவதுடெஸ்ட்போட்டி, நரேந்திரமோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில்பங்கேற்க இந்தியஅணி, இந்தப் போட்டியைவெல்லவோ, ட்ராசெய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்தியஅணிக்கு முக்கியமான போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இருப்பினும் ஆரம்பத்திலேயேஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் அக்ஸர் படேல்ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிலாந்து கேப்டன்ரூட், 5 ரன்எடுத்த நிலையில், சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ஒரு கட்டத்தில் அந்த அணி 30- ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துதத்தளித்தது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடிஅரைசதமடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அதேநேரம், டேனியல் லாரன்ஸ் 46 ரன்கள்அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அக்ஸர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின்3 விக்கெட்டுகளையும், சிராஜ்இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர்ஒரு விக்கெட்டைவீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன்கில், ரன்எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது, ரோகித் சர்மாவும், புஜாராவும்களத்தில் உள்ளனர்.

Test cricket NARENDRA MODI STADIUM INDIA VS ENGLAND
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe