Advertisment

தடுமாறும் இந்தியா! - ரோகித் நிதானம்!

rohit sharma

இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவதுடெஸ்ட்போட்டி, நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில்பங்கேற்க இந்தியஅணி, இந்தப் போட்டியைவெல்லவோ, ட்ராசெய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்தியஅணிக்கு முக்கியமான போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

Advertisment

முதலில் பேட்டிங்செய்தஇங்கிலாந்து அணியில்பென் ஸ்டோக்ஸ் அரைசதமும், டேனியல் லாரன்ஸ் 46 ரன்களும்அடித்தனர்.இறுதியில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அக்ஸர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின்3 விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர்ஒரு விக்கெட்டைவீழ்த்தினார்.

Advertisment

இதனையடுத்து இந்தியா பேட்டிங்செய்ய களமிறங்கியது. தொடக்கத்திலேயே சுப்மன்கில், டக் அவுட்டாக முதல்நாள் ஆட்டநேர முடிவில்இந்திய அணி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து இரண்டாம்நாள் ஆட்டம் இன்று தொடங்கியது ஒருபக்கம் ரோகித் நிதானமாக ஆட, மறுபுறம்விக்கெட்டுகள் விழத்தொடங்கின. புஜாரா17 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய கேப்டன்விராட்கோலி, டக்அவுட்டாகிஅதிர்ச்சியளித்தார். சிறிதுநேரம் நிலைத்து நின்றரஹானே27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவெளியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள்எடுத்து தடுமாறி வருகிறது. ரோகித்சர்மா106 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

Test cricket NARENDRA MODI STADIUM INDIA VS ENGLAND Rohit sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe