இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்மூன்றாவது டெஸ்ட்போட்டி சிட்னியில் இன்று (07/01/2021) தொடங்கியது. மழையால்பாதிக்கப்பட்ட இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியின்தொடக்க ஆட்டக்காரர் விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கி அரைசதமடித்து, 62 ரன்களில்சைனிபந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித்மற்றும் லபூஷனே, நிலைத்து நின்று ஆடத்தொடங்கினர். சிறப்பாக ஆடியலபூஷனே அரை சதமடித்தார். முதலாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 166 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய தரப்பில், சிராஜ்ஒரு விக்கெட்டும், சைனிஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணி வீரர் ரிஷப்பந்த், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் புகோவ்ஸ்கிக்கு இரண்டு கேட்சுகளைத் தவறவிட்டார். மேலும் ஒரு எளிய ரன்அவுட் வாய்ப்பிருந்தும் தப்பவிட்டார்என்பதுகுறிப்பிடத்தக்கது. இரண்டாம்நாள் ஆட்டத்தில், விரைவில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.