Skip to main content

சூப்பர் ஓவர் வரை சென்ற டி20 போட்டி... த்ரில் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்திய அணி...

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

 

india versus newzealand third t20 match summary

 

 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 65 ரன்களும், ராகுல் 27 ரன்களும் சேர்த்தனர். கோலி 38 ரன்களை சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் என்ற வெற்றியை இலக்குடன் விளையாட தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் கேன் வில்லியம்சனின் சிறப்பான 95 ரன்களால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை எடுத்து. ஆட்டம் சமனில் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

இதில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் குப்தில் களமிறங்கினர். பும்ரா வீசிய அந்த சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி 17 ரன்கள் விளாசியது. 18 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இந்திய அணியின் ராகுல் மற்றும் ரோஹித் களமிறங்கினர். முதல் நான்கு பந்துகள் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியை வெளிப்படுத்தியது. கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டிய ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்று போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

தோல்வியடையாத தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி முனைப்பில் இந்தியா.. என்ன நடக்கும் இன்று..?

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

India in series win.. South Africa who have not lost so far.. what will happen today

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

 

ஆசிய கோப்பை தோல்விக்கு பின் ஆஸியுடனான தொடரிலும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த இரு போட்டிகளிலும் வென்று அசத்தியது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பந்து வீச்சு மட்டுமே. 

 

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட போதில் இருந்து தங்கள் அணி நிர்ணயித்த குறைவான இலக்கையும் எதிரணியை எட்ட விடாமல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் அதகளம் செய்தவர் ரோஹித் சர்மா. ஆனால் ஆஸியுடனான முதல் போட்டியில் ஏறத்தாழ 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் ஆஸியை வெல்ல வைத்து அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் என்பதால் முயற்சிகள் மற்றும் சோதனைகள் அனைத்தையும் முயன்று பார்க்க இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

 

உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள அஷ்வின் ஆஸியுடனான தொடரில் களமிறக்கப் படவில்லை. இந்த தொடரில் கண்டிப்பாக அவர் விளையாடுவது அவசியம் என பார்க்கப்படுகிறது. பும்ரா, ஹர்ஷல் படேல் தங்கள் ஃபார்மிற்கு திரும்பினால் எதிரணி கண்டிப்பாக திணறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

மறுபுறம் பவுமா தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் டி காக், ரோசவ், மார்க்ரம், மில்லர் என ஒரு படை காத்திருந்தால் மறுபுறம் பந்துவீச்சில் ரபாடா, நோர்க்டியா, பிரிட்டோரியஸ், ஜேன்சன் என பட்டாளம் காத்திருக்கிறது. 

 

இரு அணிகளின் பலத்தை ஒப்பிடுகையில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு படி மேலேதான் உள்ளது. இருந்தும் இந்திய அணி புயலாய் எழுந்து நின்று தென் ஆப்பிரிக்காவை தன் சுழலுக்குள் சிக்க வைக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.  மேலும் இந்திய மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிட்ரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இதுவரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11ல் இந்தியாவும் 8ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியா உத்தேச வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல்.

 

தென்ஆப்பிரிக்கா உத்தேச வீரர்கள் : குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ரோசவ் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன்.