Skip to main content

வெற்றி முனைப்பில் இந்தியா.. இறுதிப்போட்டி கனவில் இலங்கை.. என்ன நடக்கப்போகிறது?

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

India on the verge of winning..Srilanka dreaming of the final..what will happen.

 

ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி இலங்கையுடன் மோத இருக்கிறது.

 

2022ம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக மோதும் இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. 

 

இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றின் 3 வது ஆட்டமாக இந்தியாவும் இலங்கையும் மோத உள்ளன. இதற்கு முன் பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதிப்போட்டிக்கு முன்னேற இன்று கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

 

ஆசிய கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று வீறுநடை போட்ட இந்தியா மூன்றாம் போட்டியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்றதன் மூலம் இனி நடைபெற இருக்கும் இரு போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது. மறுபுறம் இலங்கை சூப்பர் 4 சுற்றில் அதிக ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

 

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் சொற்ப ரன்களில் வெளியேறுவது அணிக்கு பெரும் பின்னடைவு. கோலி பழைய ஆட்டத்திற்கு திரும்பி இந்திய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். அவரிடம் இன்றும் பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கலாம். பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷிதீப் சிங் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது ஆறுதல் தான் என்றாலும் மிடில் ஓவர்களில் இந்திய அணி அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதும் பாகிஸ்தான் அணியுடனாட போட்டியில் 6 முதல் 15 ஓவர்களில் மட்டும் அந்த அணி 70 ரன்களுக்கும் அதிகமாக அடித்தது குறிப்பிடத்தக்கது. சூழல் மன்னன் சாஹல் தேவைப்படும் நேரத்திலெல்லாம் விக்கெட் எடுக்கும் தன்னுடைய பாணிக்கு இன்னும் திரும்பவில்லை.

 

இலங்கை அணியை பொறுத்தவரை அவர்கள் இதுவரை ஆடியது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடன் தான். இன்று இரவு நடக்கும் போட்டியில் தான் அந்த அணியின் முழுமையான பலம் வெளிப்படும். கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பனுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்‌ஷனா உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பலம்.

 

இந்திய அணி உத்தேச பட்டியல்:  ராகுல், ரோகித் சர்மா , விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் , புவனேஷ்வர்குமார், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.

 

இலங்கைஅணி உத்தேச பட்டியல்: நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஹசரங்கா, சமிரா கருணாரத்னே, தீக்‌ஷனா, அசிதா பெர்னாண்டோ, மதுஷனகா

 

 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.