Skip to main content

98 டெஸ்ட்.. 29 கேப்டன்கள்.. 71 வருடங்கள்.. 31 தொடர்கள்..

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கியது டிசம்பர் மாதம்தான். ஆனால் அதை பற்றிய விவாதங்கள் அக்டோபர் மாதம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடர் தொடங்குவதற்கு முன்னர் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என ரிக்கி பான்டிங்கும், 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என மெக்ராத்தும் தெரிவித்திருந்தனர். 

 

ii

 

முதல் டெஸ்டில் கடும் போட்டிக்கு பிறகு இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி தான் தொடரின் பெரிய திருப்புமுனை. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அட்டகாசமாக இருக்க ஆஸ்திரேலியா அணியால் சிறிதும் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை முற்றிலும் சிதறிப்போனது. நான்காவது போட்டியில் மழை ஆஸ்திரேலியா அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது.

 

பலவீனமான ஆஸ்திரேலியா அணியை வென்றதாக பலர் கூறுகின்றனர். ஆனால் தொடருக்கு முன்னர்வரை இரு அணியின் வேகப்பந்து பவுலர்களின் சராசரியை பார்த்தால் ஆஸ்திரேலியா வீரர்களின் பவுலிங் சராசரி சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் பவுலிங் சராசரி: கம்மின்ஸ்  25, ஸ்டார்க் 29,   ஹேஸல்வூட் 26. அதேசமயம் வெளிநாடுகளில் இந்திய பவுலர்களின் பவுலிங் சராசரி: சமி 31, இஷாந்த் ஷர்மா 34. 

 

ii

 

4 போட்டிகள் முடிவில் இரு அணிகளின் பவுலிங் சராசரியிலும் பெரிய வித்தியாசம் இல்லை. கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேஸல்வூட், லயன், சமி, ஜடேஜா, விஹாரி ஆகியோர் 25+ சராசரி கொண்டுள்ளனர். ஆனால், பும்ராஹ் ஒருவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவரின் பவுலிங் சராசரி 17. இதுவே இரு அணிகளின் பவுலிங்கில் பெரிய மாற்றமாக அமைந்தது.

 

முரளி விஜய் ஆஸ்திரேலியா அணியுடன் கடந்த தொடரில் 4 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 482 ரன்கள், 60.25 சராசரி என இருந்தார். இந்த தொடரில் 2 போட்டிகளில்  49 ரன்கள்,  12.25 சராசரியுடன் இருக்கிறார். விராட் கோலி கடந்த தொடரில் 4 போட்டிகளில்  4  சதம் ஒரு அரைசதம் உட்பட 692 ரன்கள், 86.50 சராசரியென இருந்தார். இந்த தொடரில் 4  போட்டிகளில் ஒரு சதம்,  ஒரு அரைசதம் உட்பட 282 ரன்கள், 40.29 சராசரியுடன் இருக்கிறார். 

 

பேட்டிங்கை பொறுத்தவரை 200+ ரன்களை கோலி, ரஹானே, ஹாரிஸ், ஹெட் ஆகியோர் எடுத்தனர். அதேசமயம் 300+ ரன்களை புஜாரா மற்றும் பண்ட் எடுத்தது இரு அணியின் பேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நல்ல ஃபார்முடன் வந்த கவாஜாவை இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். உண்மையில் ஸ்மித், வார்னர் இந்த தொடரில் விளையாடி இருந்தாலும் இந்திய அணி வென்றிருக்கும். அந்த அளவுக்கு இந்திய அணியின் பவுலிங் மாஸ் காட்டியது. இந்திய அணியின் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது.

 

i

 

 

தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரியானது 21.42 மட்டுமே. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி 43.85. இந்திய அணியின் மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது தொடக்க ஆட்டக்காரர்களின்  பார்ட்னர்ஷிப் மிகக்குறைவாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களின் சராசரி மற்ற விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் உடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களில் பவுலர்களின் பேட்டிங் சராசரி 8.07. ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களின் பேட்டிங் சராசரி 18.33. 

 

பேட் கம்மின்ஸ் 446 பந்துகளில் 163 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஸ்டார்க் 212 பந்துகளில் 117 ரன்கள், லயான் 153 பந்துகளில் 83 ரன்கள், ஹஸல்வூட் 122 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால், இந்திய அணியின் கடைசி மூன்று விக்கெட்களின் பார்ட்னர்ஷிப் 100 பந்துகளுக்கும் குறைவாகவே விளையாடியுள்ளனர். இது இந்திய அணி முன்னேற்றம் காணவேண்டிய முக்கிய பகுதி.

 

டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. இதில் இந்திய அணி சொதப்பியது. ஆஸ்திரேலியா அணி ஓரளவு சிறப்பாக விளையாடியது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய பார்ட்னர்ஷிப் ரன்களை எடுக்கவில்லை. இது அவர்களின் தோல்வியை உறுதி செய்தது.

 

i

 

அஷ்வின், ஃபிட் இல்லாதது, ஆஸ்திரேலியா தொடருக்கு முக்கிய ஆல்-ரவுண்டர் வீரராக கருதப்பட்ட ஹர்டிக் பாண்டியா இல்லாதது, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக சர்வதேச போட்டிகள் விளையாடும் வீரர்கள், 6 மற்றும் 7-வது இடத்தில் விளையாடும் வீரர் யார்? என்ற பல பிரச்சனைகளை தாண்டிதான் இந்திய அணி வெற்றி பெற்றது. 98 டெஸ்ட், 272 வீரர்கள்,  29 கேப்டன்கள், 71 வருடங்கள், 31 தொடர்களை கடந்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. 

 

தொடரில் கோலியை சதம் அடிக்க விடமாட்டோம் என கம்மின்ஸ் சவால் விடுத்தார். இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் சதம் 5, ஆஸ்திரேலியா அணி வீரர்களின் சதம் 0 என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மாதங்கள் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி இல்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகளின்போது தான் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று தனது டெஸ்ட் ஸ்கில்களை அதிகரிப்பேன் என தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியுள்ளார். 

 

 

 


 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.