இந்தியகிரிக்கெட்அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள்போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர்போட்டிகள்நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்தது டெஸ்ட்தொடர் நடைபெறவுள்ளது.டெஸ்ட்தொடருக்குதயாராகும்விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆரம்பம் முதலேவிக்கெட்டுகளை இழந்துதடுமாறியஇந்திய அணி, ரஹானேமற்றும் புஜாராவின்சிறப்பான ஆட்டத்தால் 247 ரன்கள் எடுத்து டிக்ளேர்செய்தது. இதனைத்தொடர்ந்துஆடியஆஸ்திரேலியா ஏ அணி,கேமேரான்க்ரீனின் சதத்தின்உதவியோடு 306 ரன்கள்குவித்துடிக்ளேர் செய்தது.
அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்தியஅணி முதல் இன்னிங்ஸைபோலவேவிக்கெட்டுகளை இழந்துதடுமாறியது. முதல் இன்னிங்ஸில், டக்அவுட்டானப்ரித்திவிஷா, சுப்மன்கில்இந்த இன்னிங்ஸிலும் விரைவாக ஆட்டமிழந்தனர். கடந்த இன்னிங்ஸில் சதமடித்த ரஹானே28 ரன்களிலும், அரைசதம் அடித்த புஜாராரன்எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன்பிறகு ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, 54 ரன்கள் எடுத்தது. மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டம் என்பதால், இந்த போட்டி ட்ராவில் முடிந்தது.