இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட்தொடரின், முதலாவதுபோட்டி அடிலெய்ட்டில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியஅணி 244 ரன்கள்எடுத்த்து. அதனைத்தொடர்ந்து ஆடியஆஸ்திரேலியா அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. இதானால்53 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது இந்திய அணி. தொடக்கஆட்டக்காரர் ப்ரித்வி ஷா4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள், ஆட்டநேர முடிவில், இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தநிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்தியஅணியின்பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியபேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தைதொடவில்லை. அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால்9 ரன்கள் எடுத்தார். இறுதியில் மொஹம்மது ஷமிகாயம் காரணமாகவெளியேறியதால் இந்தியஅணியின்இன்னிங்ஸ் 36ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது முடிவுக்கு வந்தது. இந்திய அணி எடுத்த 36ரன்கள், டெஸ்ட்வரலாற்றில் ஒரு இன்னிங்சில்இந்திய அணிஎடுத்த குறைந்தரன்னாக பதிவாகியுள்ளது. இதற்குமுன் இங்கிலாந்துக்கு எதிராகலார்ட்ஸ் மைதானத்தில் 42 ரன்கள்எடுத்ததேஇந்தியா எடுத்த குறைவானரன்களாகும்.
ஆஸ்திரேலியா அணிக்கு90 ரன்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது. முன்னிலையில் இருந்தஇந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு, இந்தியபேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.