Skip to main content

சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற ஹாங் ஹாங் அணியின் ஆட்டம். 

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

ஆசிய கோப்பையின் தனது முதல் போட்டியில் இந்திய அணி, குட்டி அணியாக கருதப்பட்ட ஹாங் ஹாங் அணியுடன் மோதியது. எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 285 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் தவான் அதிரடியாக விளையாடி 120 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்தார். நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். வழக்கம்போல மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்ப, ஹாங் ஹாங் வீரர்கள் சிறப்பாக பந்து வீச 285 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா அணி.

இந்திய அணியை பொறுத்தவரை அனுபவம் மிகுந்த புவனேஸ்வர் குமார், சிறந்த சுழல் பந்து வீச்சு இணை என பந்து வீச தொடங்கியது. ஹாங் ஹாங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றனர். முதல் விக்கெட்டிற்கு 174 ரன்கள் குவித்தனர். இறுதி வரை போராடிய ஹாங் ஹாங் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. குட்டி அணியான ஹாங் ஹாங்கின் இந்த போராட்டகுணம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

vvs

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான வி.வி.எஸ்.லக்ஸ்மன் ஹாங் ஹாங் அணியின் உறுதியான வெளிபாடு மிகவும் பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும், ஷிகர் தவானின் ஆட்டம் சிறந்த இன்னிங்க்ஸ் எனவும், ராயுடு மற்றும் கலீல் அஹமது ஆகியோரின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்றும்  ட்வீட் செய்துள்ளார். 
 

fs

 

பைசன் லஹாணி: ஹாங் ஹாங் அணி நன்றாக விளையாடியது. இன்று எங்களின் மனங்களை வெற்றி கொண்டது ஹாங் ஹாங். இந்திய அணியை தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. இரு அணிகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அனுபவம் மட்டுமே. 
 

deep


தீப் தாஸ்குப்தா: நிசகட் மற்றும் அன்ஷுமன் ஆகியோரின் பேட்டிங் முதிர்ச்சியானது. போட்டியின் முடிவை காட்டிலும், ஹாங் ஹாங் அணியின் சிறப்பான ஆட்டம் உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

naraay


தீபு நாராயணன்: தொடக்க ஆட்டம் சிறப்பாக இருந்தும் தோல்வியை சந்தித்த இரண்டாவது தொடக்க இணை.

 

sww


ஸ்வப்னில்: வலுவில்லாத அணியிடம் தோனி டக் அவுட் ஆனது ஓகே தான். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆட வேண்டாம்.

 

viru


நிக்ஹில் வீரு: தோனிக்கு வலை பயிற்சியில் ஆர்வம் இல்லை. எனவே அவர் தனது எனெர்ஜியை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய பெரிய ஆட்டத்திற்காக சேமித்து வைத்துள்ளார். 
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.