இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்முதலாவதுஇருப்பதுஓவர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கே.எல். ராகுல்மற்றும் ஜடேஜாவின் சிறப்பானஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணிக்கு162 ரன்களை, இலக்காகநிர்ணயித்தது.
இந்தநிலையில், இந்தியஅணி வீரர் ரவீந்திரஜடேஜா பேட்டிங் செய்யும்போது, அவரதுதலையில்பந்து தாக்கியது. மேலும், அவருக்குதசை பிடிப்பும்ஏற்பட்டது. இதனால், ஜடேஜா ஃபீல்டிங்செய்ய வரவில்லை. புதிய ஐ.சி.சிவிதிமுறைப்படி, வீரருக்குத் தலையில்காயம்ஏற்பட்டால், மாற்று வீரரை களம்இறக்கிக் கொள்ளலாம். காயம் அடைந்தவீரர், பேட்ஸ்மேனாக இருந்தால், வேறு ஒருபேட்ஸ்மேனையும்,பந்துவீச்சாளராக இருந்தால்வேறு ஒருபந்து வீச்சாளரையும்களம்இறக்கலாம். அப்படிக் களம்இறங்குபவர்கள் பேட்டிங்செய்யவும் பந்து வீசவும்முடியும். இதனடிப்படையில், இந்தியாசஹாலைகளமிறக்கியது.
இதற்குஆஸ்திரேலியா அணி, கடும்அதிருப்தியை தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியின்பயிற்சியாளர் ஜஸ்டின்லங்கார், போட்டி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நடந்த போட்டியில், சாஹல், ஆஸ்திரேலியாவின் முக்கியவீரர்களான ஸ்டீவ்ஸ்மித், ஆரோன்பின்ச்ஆகியோரையும், மேத்யூவேடையும்ஆட்டமிழக்கச் செய்து, போட்டியைஇந்தியா பக்கம் திருப்பியதுகுறிப்பிடத்தக்கது.