"நாளைய போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார்"! - விராட் கோலி பேட்டி!

india cricket team captain virat kohli press meet

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (05/02/2021) தொடங்குகிறது.

இந்த நிலையில், இன்று (04/02/2021) சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்தியகிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை ரிஷப் பந்த் களமிறங்குவார். நானும் ரஹானேவும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம்; அவர் பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார். அணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.வெற்றிபெற வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்புடன் உள்ளோம். நாட்டில் எந்தப் பிரச்சனை என்றாலும் அது குறித்த போட்டியின் இடையே வீரர்கள் விவாதிப்போம்" என்றார்.

INDIA CRICKET TEAM PRESS MEET virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe