Advertisment

"எனது கருத்து அஸ்வினை வருத்தப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி" - ரவி சாஸ்திரி!

RAVI SHASTRI

இந்திய அணி கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் கடைசி டெஸ்டின்முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளைவீழ்த்தினார். அப்போது பேசிய இந்திய அணியின் அப்போதையபயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது, சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாகஇருப்பார் என தெரிவித்தார்.

Advertisment

இந்தச் சூழலில்அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்ற கருத்தால் தான் நொறுங்கிப்போனதாக தெரிவித்தார். இந்நிலையில், தனது கருத்தால் அஸ்வின் வருத்தப்பட்டிருந்தால் அது தனக்கு மகிழ்ச்சியே என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகரவி சாஸ்திரி கூறியுள்ளதாவது,“ஒரு பயிற்சியாளராக நான் உங்களுக்குச் சொல்கிறேன். அங்கு எனது வேலை அனைவரதுரொட்டிக்கும் வெண்ணெய் தடவுவதுஅல்ல. எனது வேலை என்னவென்றால், எந்த நோக்கமும் இல்லாமல், உண்மைகள் எப்படி இருக்கிறதோஅப்படியே சொல்வதுதான். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விளையாடவில்லை. குல்தீப் விளையாடினார். அற்புதமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளைஎடுத்தார்.

அவர் பந்துவீசிய விதத்தை வைத்து வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 [சுழல்] பந்துவீச்சாளராகஅவர் இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன என கூறினேன். அது வேறு ஒரு வீரரைக் காயப்படுத்தினால்நல்லது என்று கூறுவேன்.திரும்பிப் பார்க்கையில், நான் அந்தக் கருத்தைக் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரைகாயப்படுத்தி, இதனால் அவர் வருத்தப்பட்டதால்அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு வீரர் தனக்குள்ளே, ‘நான் யாரென்று இந்தப் பயிற்சியாளருக்கு காட்டப் போகிறேன், அவருக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அவருக்குக் காட்டப் போகிறேன்’ என நினைக்க வேண்டும்என விரும்பும் பயிற்சியாளர் நான்.

எனவே எனது கருத்து அவரை வருத்தப்படுத்தியிருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.அது அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2019இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய விதம் சுண்ணாம்பு போன்றது. 2021இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்து வீசியது வெண்ணெய் போன்றது. நான் எந்த நாளிலும்வெண்ணெய்யைத்தான்தேர்ந்தெடுப்பேன்.” இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe