Skip to main content

பாண்டியா ஆடிய தோனி ஷாட்... உலக்கோப்பையில் விளையாடுவாரா?

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் முக்கிய ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பார். ஆனால் காயம் மற்றும் டி.வி. நிகழ்ச்சியில் பெண்களை குறித்து பேசிய சர்ச்சை காரணமாக சில மாதங்களாக சர்வதேச அணியில் நிரந்தரமாக விளையாடவில்லை. ஆசியக்கோப்பைக்கு பிறகு18 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் 3 போட்டிகளில் மட்டுமே பாண்டியா விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் பாண்டியா கட்டாயமாக இருப்பார்.
 

hardik dhoni

 


தற்போது ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியில் ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோர் விளையாடினார்கள். நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஜடேஜா எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. விஜய் சங்கர் பேட்டிங்கில் கலக்கினாலும், பவுலிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பாண்டியா அளவிற்கு சங்கர் மற்றும் ஜடேஜா விளையாடாத காரணத்தால் பாண்டியாவின் பிட்னஸ் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
 

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியின்போது ஹர்திக் பாண்டியா தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தினார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் எந்த சர்வதேச தொடரும் இல்லாத காரணத்தால் பாண்டியாஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
 

ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதியை பொறுத்துதான் அணியின் காம்பினேசன் இருக்கும். இவரை பொறுத்தவரை சோர்ந்து கிடக்கும் பீல்டிங் யூனிட்டிற்கு வலுசேர்ப்பார். பவுலிங்கிலும் தனது முழு கோட்டாவை பூர்த்தி செய்வார். பேட்டிங்கில் எதிரணி பவுலர்களை திணற செய்வார். இப்படிப்பட்ட ஒரு ஆல்ரவுண்டருக்கு மாற்று இல்லை.
 

இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் 731 ரன்கள், பேட்டிங்சராசரி 30 மற்றும் 44 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். சென்ற வருடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆல்ரவுண்டராக பங்களித்திருந்தார். 140+கி.மீ. வேகத்திலும் பந்துவீசக் கூடியவர்.
 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வர இந்த ஐ.பி.எல். தொடர் பாண்டியாவிற்கு பெரிதும் உதவும். 2018-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 13 போட்டிகளில் 260 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 133.33 மற்றும் 18 விக்கெட்கள் எடுத்திருந்தார்.

 

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.