ADVERTISEMENT

விரைவில் ஓய்வை அறிவிக்கும் ஹர்பஜன் சிங்  - ஐபிஎல் அணியுடன் பேச்சுவார்த்தை!

05:21 PM Dec 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அணியில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே கழட்டிவிடப்பட்டாலும் ஓய்வை அறிவிக்காமல் இருந்து வந்தார். அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடி வந்தார்.

இந்தநிலையில் ஹர்பஜன் சிங், அடுத்த வாரத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வுக்கு பிறகு அவர் ஐபிஎல் அணி ஒன்றில் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், இதுதொடர்பாக ஒரு அணி நிர்வாகத்திடம் அவர் பேசி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அந்த அணியுடன் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அதுகுறித்து ஹர்பஜன் சிங் அறிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT