Skip to main content

ஐபிஎல் 2022- சாம்பியன் பட்டத்தை வென்றது 'குஜராத் டைட்டன்ஸ்'

Published on 29/05/2022 | Edited on 30/05/2022

 

Gujarat Titans win IPL 2022 title

 

பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது 'குஜராத் டைட்டன்ஸ்' அணி.

 

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. அறிமுக அணியாக களமிறங்கிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.