Skip to main content

தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினேனா..? கோமதி விளக்கம்...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. இவருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

gomathi denies the usage of banned substances in asian championship

 

 

இந்நிலையில் கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என டெக்கன் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோமதி, "இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒன்று பேசப்படுவதை நானே செய்திதாளை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து தேசிய தடகள சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். எதன் அடிப்படையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டது என தெரியவில்லை" என கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய கோமதியின் சகோதரரும் இந்த செய்தியை மறுத்துள்ளார். 

 

 

Next Story

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Incentive hike for physically chalanged athletes

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை வழங்கிட கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம் பெற்றிருந்தன. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம் பெறவில்லை.

 

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்படாத குறையினை கண்டறிந்து அதனைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 இலட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1.50 இலட்சம் எனவும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Next Story

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தமிழக வீரர் தேர்வு; முதல்வர் வாழ்த்து

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Tamil Nadu Player Chosen as Asia's Best Athlete; Greetings from the Chief Minister

 

சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில் (ட்ரிப்பிள் ஜம்) தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வபிரபு திருமாறன் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதையடுத்து ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரர் என்ற அங்கீகாரம் செல்வபிரபு திருமாறனுக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் செல்வபிரபு திருமாறனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறன் அவர்களுக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில், “ஆசியாவின் சிறந்த ஜுனியர் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். ஆசிய  தடகள சம்மேளத்தின் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.