ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் 77கிலோ எடைதூக்கும் பிரிவில்தமிழகத்தை சேர்ந்தபளு தூக்கும் வீரர்சதீஷ்குமார் சிவலிங்கம்தங்கம் வென்றுள்ளார். பளுதூக்குவதில் 144 கிலோ மற்றும் 173 கிலோ எடை பிரிவு என மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் ஏற்கனவே 2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதுவரை நடைபெற்றகாமன்வெல்த் போட்டிகளில்இவர் மொத்தம்3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
சாதாரண நடுத்தர குடுப்பதில் பிறந்த சதீஷ்குமார் தனது தந்தையின் ஊக்குவிப்பால் தனது 12-வது வயதிலிருந்து பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு மாவட்ட அளவிலும் பின்பு மாநில அளவிலும்கலந்து கொண்டு பலபதக்கங்களைவென்றவர்.
தற்போது காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்சதீஷ் குமாரைஇந்தியகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.