Skip to main content

அன்று மெக்ராத்... இன்று பும்ரா...

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கிரிக்கெட்டில் வித்தியாசமான ரசிக்கத்தக்க சில விஷயங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே இருக்கும். டி வில்லியர்ஸ் விளையாடும் 360 டிகிரி ஷாட்ஸ், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், கெவின் பீட்டர்சனின் ஸ்விட்ச் ஹிட், தில்ஷானின் தில்ஸ் ஸ்கூப் என மாடர்ன் டே பேட்டிங் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இதேபோல பவுலிங்கிலும் அவ்வப்போது புதிய வெர்ஷன் பவுலிங் அறிமுகமாகும். 

 

bumrha

 

உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் உடல் அசைவு, பேட்டிங், பவுலிங் ஆக்‌ஷன் போல முயற்சி செய்கின்றனர். சச்சினின் ஸ்ட்ரைட் டிரைவ், டிராவிட்டின் கிளாச்சிக்கல் ஷாட்ஸ் போன்றவை பேட்டிங்கின் பாடப்புத்தகம் என்று கருதப்படுகிறது. அதேபோல மெக்ராத் மற்றும் சமிந்தா வாஸ் போன்ற பவுலர்களின் பவுலிங் ஸ்டைல் பவுலிங்கின் பாடப்புத்தகம் என்று அழைக்கப்படுவதுண்டு. இவர்களது பேட்டிங், பவுலிங் ஸ்டைலை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் முயற்சி செய்ததுண்டு. ஜாகிர் கான், பிரெட் லீ ஆகியோரது பவுலிங் ஸ்டைலும் பிரபலம். 
 

glenn mcgrath

 

தற்போது பும்ராவின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் மிகவும் பிரபலம். சர்வதேச கிரிக்கெட்டில் பும்ராவிற்கு முன்பே சில கிரிக்கெட் வீரர்கள் வித்தியாசமான முறையில் பவுலிங் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸ் வித்தியாசமான முறையில் பந்து வீசுவார். அந்த பவுலிங் ஸ்டைல் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல இலங்கை அணியின் ஜாம்பவான் பவுலர்கள் முரளிதரன், மலிங்கா ஆகியோரும் வித்தியாசமான பவுலிங் முறையை கொண்டவர்கள். இவர்களது பவுலிங்கும் அவ்வப்போது சர்ச்சைகளை சந்தித்தது. 
 

zaheer khan

 

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான க்ரிஸ் ஹாரிஸ், இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான டிபாசிஸ் மோகன்தி, ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த டைட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான காம்ரான் கான் என வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் கொண்டவர்கள் பட்டியல் அதிகம். பவுலர்கள் ஒரு சில புதிய வித்தியாசமான முறையில் பவுலிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் அந்த பந்தை கணித்து விளையாடுவது சிரமமாக இருக்கும். வித்தியாசமான முறையில் பவுலர்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  
 

தற்போது ஹாங்ஹாங்கில் அண்டர்-13 லீக் போட்டியில் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சை போலவே வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹாங்ஹாங் கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 

ஒரு சிறுவன் பும்ராவை போல பந்துவீச முயன்ற வீடியோ வைரலாவது இது முதல் முறை அல்ல. பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹாங்காங் அண்டர்-13 லீக் போட்டியில் நடந்த சம்பவத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவர் பும்ராவின் பவுலிங் போல முயற்சி செய்தது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அந்த சிறுவனின் முயற்சியை பும்ரா ட்விட்டரில் பாராட்டினார்.  
 

சமீபத்தில் பிசிசிஐ இணையதளத்தில் வெளியான புதுவிதமான ஸ்விட்ச் பந்துவீச்சு வைரலானது. இடது கை சுழற்பந்துவீச்சாளர் சிவில் கவுசிக் தலையை சுற்றி ஒரு வித்தியாசமான முறையில் 360 டிகிரி சுழற்பந்துவீச்சை வீசி பிரபலமானார். இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர், ஐ.பி.எல். தொடரில் குஜராத் லைன்ஸ் அணிக்கு விளையாடியிருந்தார். இவரது இந்த புதுவிதமான பவுலிங் பல்வேறு விமர்சனத்தை சந்தித்தது.  
 

shivil

 

ஒரு காலத்தில் வெளிநாட்டு பவுலர்களின் ஆக்‌ஷனை இந்திய சிறுவர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் அந்த நிலை மாறி தற்போது இந்திய அணி பவுலர்களின் ஆக்‌ஷன் முறையை வெளிநாட்டு சிறுவர்கள் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

Next Story

பும்ரா மீது அதிருப்தி; ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் கேட்கத் தயாராகும் பிசிசிஐ!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

hardhik pandya and jasprit bumrah

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.

 

 

Next Story

"ஐபிஎல்-க்கு பிறகு அணி சோர்வாக இருக்கிறது" - தோல்விக்கு பிறகு உண்மையை உடைத்த பும்ரா!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

bumrah

 

2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகள், நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் உள்ளது.

 

இந்தநிலையில், தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இந்திய அணி சோர்வாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி சோர்வாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பும்ரா கூறியதாவது, "நிச்சயமாக. சில நேரங்களில் நமக்கு ஓய்வு தேவை. குடும்பத்தைப் பிரிந்து இருந்துவருகிறோம். ஆறுமாதங்களாக தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறோம். இவை அனைத்தும் சில சமயங்களில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் களத்தில் இருக்கும்போது, அதையெல்லாம் நாங்கள் நினைப்பதில்லை. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதும், குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

பிசிசிஐயும் எங்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தது. இது கடினமான நேரம். ஒரு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, மன சோர்வு போன்றவை ஊடுருவுகிறது." இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

 

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலிருந்து, இந்திய வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.