Advertisment

ரோகித் ஷர்மா இல்லாத இந்திய அணி... முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்த ஆஸி. வீரர்!

Rohit Sharma

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

Advertisment

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறாத ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கெடுக்க இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ரோகித் ஷர்மா இல்லாத ஒருநாள் தொடர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "ரோகித் ஷர்மா தரமான வீரர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளார். நமக்கு எதிரான அணியில் அவர் இடம்பெறாதது நல்ல விஷயம்தான். ஆனால், இந்திய அணியில் கே.எல்.ராகுல் மாற்று வீரராக உள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்குகிறாரோ இல்லையோ, அவர் சிறந்த வீரராக இருப்பார் என்பது உறுதி" எனக் கூறினார்.

Rohit sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe