Skip to main content

இந்தியாவில் தேர்தலில் நான் போட்டியிட்டால்... - மனம் திறக்கும் ரஷீத்கான்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018

வெறும் 19 வயதேயான ஒரு சுழற்பந்து வீச்சாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களை கதிகலங்க வைத்து, உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான். 
 

Rashid

 

 

 

மிகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஆப்கானிஸ்தானின் சூழலில், கிரிக்கெட்டைக் கற்றுத்தேர்ந்து உச்சத்தை அடையமுடியும் என்று நம்பியதே அவரது முதல் வெற்றியாகும்.
 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்களில், சளைக்காத ஆட்டங்களை வெளிப்படுத்திய ரஷித் கான், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றவுடன் இந்தியாவுடன் களமிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவை ரஷீத்கான் பெற்றிருந்தார். 
 

Rashid

 

 

 

இந்திய ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது குறித்து பேசியுள்ள ரஷீத்கான், ‘வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவது எளிய காரியம் இல்லை. ஆனால், நான் அவர்களின் அன்பைப் பெற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். என் இரண்டாவது வீடாக என்னும் இந்தியாவிற்கு வருவதை நான் பெரிதும் விரும்புகிறேன். அன்பையும், உபசரிப்பையும் வழங்குவதை நான் இந்தியாவில்தான் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் உள்ள பல ரசிகர்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர். டி20 தொடர் முடிந்தபிறகு டேராடூனுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்குள்ள ஒரு உணவு விடுதியில் என்னைக் கண்ட ஒரு சிறுவன், ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டான். நான்தானா என்பதை அறிய என் கண்ணத்தைக் கிள்ளினான். மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் வரை என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தலில் நான் போட்டியிட்டால் வெற்றிபெறுவேன் என்றுகூட ரசிகர் ஒருவர் தெரிவித்தார்’ என மனம்திறந்து பேசியுள்ளார். 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.