இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசெய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.
கங்குலிஇதயத்தில் இருக்கும்மேலும் இரண்டு அடைப்புகளைசரி செய்யஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும், அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாலும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும்,சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகுஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் எனமருத்துவக் குழு முடிவுசெய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைமுடிந்த கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது பேசியகங்குலி, "எனக்குசிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி. நான் இப்போது நலமாகஉள்ளேன். கூடிய சீக்கிரம் பறக்கத் தொடங்குவேன்எனநம்புகிறேன்" என்று கூறினார்.