Skip to main content

நான் சொதப்புகிறேன்.. கேப்டன் பதவி வேண்டாம்! - டெல்லி கேப்டன் கம்பீர்

Published on 25/04/2018 | Edited on 26/04/2018

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

 

Gambhir

 

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து சீசன்களிலும் மிக மோசமான ட்ராக் ரெக்கார்டுகளைக் கொண்ட அணி டெல்லி டேர்டெவில்ஸ். இரண்டு முறை கொல்கத்தா அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த கவுதம் கம்பீர், இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 

 

அதுமட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் அவர் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணி மற்றும் கம்பீர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு குவிந்தது. ஆனால், இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல், முதல் போட்டியில் அரைசதம் அடித்த டெல்லி அணியின் கேப்டன் கம்பீர், அதைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் ஒற்றை இலக்கங்களில் வெளியேறி ஏமாற்றினார்.

 

இந்நிலையில், தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அணியின் தற்போதைய நிலைக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அதைக் கருத்தில்கொண்டே கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் அந்தப் பொறுப்பை வகிப்பார். இப்போதுகூட இந்த சீசனில் நம் அணியால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொதப்பிவிட்டேன். சரியாக விளையாடவில்லை. இதுவே நான் விலக சரியான நேரம். என்னை விலகுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். 

Next Story

தோனியும் கோலியும் இந்த ஒரு விஷயத்தில் வித்தியாசமானவர்கள்... கவுதம் காம்பீர் பேச்சு!!!

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

gambhir

 

தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் போட்டிகளுக்கான தலைமைப் பண்பு குறித்து கவுதம் காம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

13- ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் அணித் தேர்வு மற்றும் தலைமைப்பண்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "தோனி மற்றும் விராட் கோலியின் தலைமைப் பண்பில் நிறைய வித்தியாசம் உள்ளது. தோனி முதல் ஏழு போட்டிகளில் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யமாட்டார். விராட் கோலியைப் பொறுத்தவரை இது நேர்மாறாக இருக்கும். முதல் சில போட்டிகளிலேயே பெங்களூரு அணியில் மாற்றம் செய்துவிடுவார். இதனால் அணியால் நிலை பெற முடிவதில்லை. முதல் சில போட்டிகளில் சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, அதே அணியோடு விராட் கோலி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். முதல் சில போட்டிகளிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பெங்களூரு அணி வீரர்கள் விளையாடும் விதமும், தொடர்ச்சியான வாய்ப்பும்தான் அவர்களைச் சிறந்த அணியாக்கும்" என்றார்.   

 

 

Next Story

"இருவரும் மோதி பார்க்கலாமா என தோனியிடம் சவால் விட்டேன்" - பிராவோ பகிர்ந்த சுவாரசிய தகவல்....

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

2018 ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கும், தனக்கும் இடையே நடைபெற்ற ஓட்டப்போட்டிக்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் பிராவோ.

 

story behind dhoni and bravo running race

 

இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிராவோ, "2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு போட்டியின்போது, தோனி என்னை வயதானவர், வயதானவர் எனக்கூறி சீண்டிக்கொண்டே இருந்தார். மேலும், எனக்கு வயதாகிவிட்டதால்தான் வேகமாக ஓடமுடியவில்லை எனக்கூறி கிண்டல் செய்தார். அப்போது நான் அவரிடம், இருவரும் ஆடுகளத்தில் ஓடிப் பார்க்கலாமா, யார் வேகமாக ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்றேன்.
 

 nakkheeran app



முதலில் அதற்கு மறுத்த தோனி பின்னர் ஒப்புக்கொண்டார். ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு சவாலை வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் போட்டியின் நடுவே இந்த சவாலால் யாராவது ஒருவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இறுதிச்சுற்றுக்குப் பிறகு ஓட்டப் பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம் என்றேன். அப்படிதான் அந்த போட்டி நடைபெற்றது. அது மிகவும் கடுமையான போட்டி. நூலிழையில் அவர் என்னைத் தோற்கடித்தார். அவர் விரைவாக ஓடினார்" என்று கூறியுள்ளார்.