team india

Advertisment

2022 ஆம் ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற இரண்டு புதிய ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கின்றன. இந்தநிலையில் லக்னோ அணிக்குஆண்டி பிளவர் நேற்று தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தநிலையில், அவரது மோசமான ஃபார்ம் காரணமாக ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஹாம்ஸ்ட்ரிங் காரணமாக விலகிய நிலையில், தற்போது கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.