Skip to main content

ருதுராஜ் கெய்க்வாட் அசத்தல்; சென்னை தோல்வி

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Gaekwat is wacky; Chennai defeat

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி இன்று துவங்கியது. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.

 

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழக்க ருதுராஜ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு இணையாக ஆடிய மொயின் அலி 23 ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

தொடர்ந்து ராயுடுவும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் ருதுராஜ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களும் அடக்கம். பின் வந்த ஜடேஜா, துபே வந்ததும் வெளியேறினர். இறுதி ஓவரில் தோனி 3 மற்றும் 4 ஆம் பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாச சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியில் ஷமி, ரஷித் கான், அல்ஷாரி ஜோஷப் தலா 2 விக்கெட்களை வீழ்த்த ஜோஷ்வா லிட்டில் 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. சஹா 25 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 22 ரன்களை அடித்து சுப்மன் கில்லுக்கு ஒத்துழைத்தார். கேப்டன் ஹர்திக் 8 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளுக்கு 63 ரன்களை குவித்து வெளியேறினார். இறுதியில் விஜய் சங்கர் 27 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்ல இறுதியில் வந்த ரஷித் கான் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி என பறக்க விட்டார். 

 

இறுதி ஓவரில் முதல் இரு பந்துகளையும் சிக்ஸ் மற்றும் பவுண்டரி ஆக்கிய ராகுல் தெவாட்டியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஹங்கர்கேக்கர் 3 விக்கெட்களையும் ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.