ஆல் கேரளா செவன்ஸ் கால்பந்து சங்கம் சார்பாக கேரள மாநிலம் கொச்சியில் செவன்ஸ் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் பெரிந்தல்மன்னா அணிக்கு திருச்சூர் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஆட்டத்திற்கு நடுவே பெரிந்தல்மன்னா அணி வீரர் தனராஜன் ஆடுகளத்தில் கையை உயர்த்தியவாறு கீழே விழுந்தார். முதலுதவி செய்து விட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.