ADVERTISEMENT

"தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சதமடித்தவன் நான்...” இளம் வீரரிடம் சீறிய அஃப்ரிடி

03:45 PM Dec 01, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அஃப்ரிடி கண்டிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் லங்கன் பிரீமியர் லீக் எனும் பெயரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இலங்கை வீரர்கள் மட்டுமின்றி பிறநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் 18-ஆவது ஓவரின்போது காலி கிளாடியேட்டர்ஸ் வீரர் அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்வீரரான நவீன்-உல்-ஹக்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. பிற வீரர்கள் தலையீட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின் போட்டியின் முடிவில் அனைத்து வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும்போது நவீன்-உல்-ஹக்கை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான அஃப்ரிடி கண்டித்தார்.

அவரிடம் அஃப்ரிடி, "தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சர்வதேச போட்டிகளில் நான் சதமடித்தவன் எனக் கூறியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT