Skip to main content

பரபரப்பான இறுதி ஓவர்; பல்தான்ஸை வீழ்த்திய லக்னோ

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Exciting final over; Lucknow who defeated Paltans

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 63 ஆவது லீக் போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய லக்னோ அணி 3 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 89 ரன்களையும் க்ருணால் பாண்டியா 49 ரன்களையும் எடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ப்ஹெண்ட்ராஃப் 2 விக்கெட்களையும் சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

பின் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 59 ரன்களையும் ரோஹித் சர்மா 37 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களையும் யஷ் தாக்கூர் 2 விக்கெட்களையும் மோஷின் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். நடப்பு சீசனில் தீபக் ஹூடா குறைந்த பட்ச சராசரியை வைத்துள்ளனர். அவர் 10 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 6.90 மட்டுமே சராசரியாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

காற்றின் குழந்தை; நீங்கள் ஒரு ரத்தினம் - பாராட்டு மழையில் இந்தியாவின் வேக மன்னன்!

Published on 03/04/2024 | Edited on 04/04/2024
Child of the Wind; You are a gem - India's speed king mayank yadav in shower of compliments

இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் புதிய முகமாக உருவெடுத்துள்ளார் லக்னோ அணியின் வீரரான மயங்க் யாதவ். அறிமுகமான இரண்டு போட்டிகளிலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பிரபலமடைந்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழும் அளவுக்கு என்ன செய்தார் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த 21 வயதே ஆன மயங்க் யாதவ் ஒரே ஒரு முதல் தர போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். List A கிரிக்கெட்டில் 17 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2023 ஆம் வருடம் ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அந்த சீசனில் விளையாடவில்லை. 

இதையடுத்து இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் மயங்க் யாதவ். அறிமுக ஆட்டத்திலேயே அசத்தினார். 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய வீரர்களான பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தான் வீசிய அனைத்து பந்துகளும் 140கி.மீ வேகத்துக்கு குறையாமல் வீசுவதால், முதல் ஆட்டத்திலேயே கவனம் பெற்றார். சீரான வேகத்தில் வீசுவதால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், ஐபிஎல் 2024இன் 15 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, லக்னோ அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், தயால், டாப்லி, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 19.4 ஓவர்களில் பெங்களூரு அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்ததன் மூலம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளும், அவரின் 156.7 கி.மீ வேகமும் தான் கிரிக்கெட் உலகத்தில் பேசுபொருளாகி உள்ளது. நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் வீசப்பட்ட இரண்டாவது ஓவரின் முதல் பந்து 156.7 கி.மீ வேகத்தில் வீசப்பட்டது. இதுவே இந்த 2024 சீசனில் தற்போது வரை மிகச்சிறந்த வேகமாகும். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் பர்கர் 153 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகத்தில் வீசிய இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார். உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் முதலிடத்தில் உள்ளார்.

இவரின் 156.7 கி.மீ வேகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப்பந்து வீச்சின் ஜாம்பவனான வெஸ்ட் இண்டீஸின் இயான் பிஷப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மயங்க் பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இந்த மயங்க் யாதவ் காற்றின் குழந்தை போல பந்து வீசுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கவின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் ஸ்டெயினின் பதிவில் “இது ஒரு தீவிரமான வேகம்” என குறிப்பிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் பதிவில் “என்ன ஒரு வேகம்” எனவும், புகழ்பெற்ற வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே “ நீங்கள் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு மயங்க் யாதவ் பந்து வீசுவதைப் பாருங்கள். லக்னோ, நீங்கள் ஒரு ரத்தினத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இந்தியாவின் முனாஃப் பட்டேலுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பின்பு வருண் ஆரோன்,பும்ரா,உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால், பும்ரா தவிர்த்து ஆரோனும், உம்ரானும் வேகத்தில் செலுத்திய கவனத்தை துல்லியத்தில், மயங்க் அளவுக்கு செலுத்தவில்லை. அதனால் அவர்கள் விக்கெட் எடுக்கத் தடுமாறினர். ஆனால், மயங்க் வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். 

பும்ரா,ஷமி,சிராஜுக்குப் பிறகு பெரிதாக வேகப்பந்து வீச்சில் யாரும் இந்த அளவுக்கு ஈர்க்கவில்லை. பேட்டிங்கில், கோலிக்கு பிறகு, கில், யசஸ்வி, இஷான், ரிங்கு, திலக் வர்மா என முக்கிய வீரர்களாக பலர் உருவாகி வருகிறார்கள். தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். ஆனால், பந்து வீச்சில் பும்ரா அளவுக்கு யாரும் ஈர்க்கவில்லை. பும்ராவுக்கு அடுத்து யார் முக்கிய வீரராக இருக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் பேசி வந்த நிலையில், இந்தியாவின் வருங்கால வேகப்பந்து வீச்சு கூட்டணியில் இவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.