Skip to main content

வெளியேறிய நடப்பு சாம்பியன்; அரையிறுதி கணக்குகளில் நிகழ்ந்த மாற்றம் என்ன?

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

England vs australia match in world cup

 

உலகக் கோப்பையின் 36 ஆவது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடிமைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

 

இதில் அதிகபட்சமாக மார்ன்ஸ் லபுஷேன் 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 71 ரன்களை குவித்தார். அதே போல், கீரின் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களும்,ஸ்டீவன் ஸ்மித் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதனை தொடர்ந்து, வார்னர், ஹெட் என அடுத்தடுத்த வீரர்கள் களமிறங்கிய குறைந்த ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில், 49.3 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது. பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்ற அடுத்து வந்த ரூட்டும் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த மாலன் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். அரைசதம் கடந்த மாலன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 1 ரன்னில் வெளியேறினார். ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் மொயீன் அலி 42, வோக்ஸ் 32 ரன்கள் த்விர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 3 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

 

இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், 4 ஆவது இடத்தைப் பெறும் அணி 12 புள்ளிகளே பெறும் என்பதால் அதிக ரன் விகிதம் வைத்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் தோற்றதால் தொடரிலிருந்து வெளியேறியது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு 6 அணிகளிடையே போட்டி நிலவுகிறது. இலங்கையும், நெதர்லாந்தும் ரன் விகிதம் குறைவாக இருப்பதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்