Advertisment

வேகத்தை நம்பிய இங்கிலாந்து; சுழலால் சுருட்டிய இந்தியா!

team india

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில்இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றநிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக இன்று (24.02.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடும், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களோடும் களமிறங்கியது. இங்கிலாந்து அணியோ, பிங்க்நிறப் பந்து, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமெனகருதி ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸோடு 4 வேகப்பந்து வீச்சாளர்களோடும், ஒரே ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரோடும் களமிறங்கியது. போட்டியில் டாஸ் வென்றஇங்கிலாந்து அணி, பேட்டிங்கைதேர்வு செய்தது.

Advertisment

போட்டி தொடங்கியது முதலே, இங்கிலாந்து எதிர்பார்த்தது போல வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. மாறாக சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபட்டது. இந்தியவீரர்களின் சூழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வருவதும்போவதுமாகஇருந்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 112 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில்அதிகபட்சமாகஜாக் கிராலி53 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்துஅதிகபட்சமாக இங்கிலாந்து அணி கேப்டன்17 ரன்கள் எடுத்தார்.

இந்தியஅணி தரப்பில் அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், தனது 100வது டெஸ்டில் ஆடும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Day Night Test INDIA VS ENGLAND team india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe