Skip to main content

டிஜிட்டல் டாடா ஐபிஎல்; தோனி கீப்பிங்  சூர்யகுமார் யாதவ் பேட்டிங்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

digital tata ipl

 

"டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல்" என்ற தலைப்பில் ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் பிரச்சாரத்தின் புது அனுபவத்திற்காக எம் எஸ் தோனி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தனர்.டாடா ஐபில்-ன் டிஜிட்டல் பார்ட்னர்கள், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை இலவசமாக டிஜிட்டலில் கண்டு அனுபவிக்கவும்,லீக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லவும் ஜியோசினிமா அதன் தொலைக்காட்சி காணொளியை 11 மொழிகளில் வெளியிட்டது

 

மும்பை 17 மார்ச் 2023: ஜியோசினிமா தனது டாடா ஐபில் விளையாட்டு பிரச்சாரத்தை இந்திய ஜாம்பவான் MS தோனி மற்றும் உலகின் நம்பர் 1  பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துவக்கி வைத்தனர். "டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபில்"  என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு, பிரபல நடிகர்களான ஸ்வேதா திரிபாதி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களுடன் டாடா ஐபில் - ஐ டிஜிட்டலில் இலவசமாக பார்ப்பது தான் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

11 மொழிகளில் வெளியான இந்த டாடா ஐபில் விளம்பர பிரச்சாரத்தை, சிறந்த விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளரான அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். ஒரு சிறிய நகர இனிப்புக் கடையில் நான்கு நண்பர்கள் குழு ஒன்று கூடி டாடா ஐபில் ஆட்டத்தை டிஜிட்டலில் காணுகின்றனர். அவர்கள் அந்த கடையின் உரிமையாளரையும் வற்புறுத்தி டாடா ஐபில்-ஐப் பார்க்க வைக்கின்றனர். தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்தந்த போட்டிகளில் விளையாடி இருப்பதை, காணும் போது திடீரென்று ஒரு நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அவர்கள் திரும்ப திரும்ப அந்த நகைச்சுவையை பல்வேறு வடிவங்களில் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே ரசிகர்களிடம் கெஞ்சுவது போன்ற நிகழ்வு மிகவும் ஈர்க்கப்படுகிறது. 

 

இந்த டாடா ஐபில்-ஐ பார்வையாளர்கள் அற்புதமாக அனுபவிக்க அந்த நான்கு நண்பர்கள் குழுவில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் வந்து சேர்கிறார்கள். ஜியோசினிமாவில் டாடா ஐபில்-ஐ நேரலை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கேமரா கோணங்களையோ அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம். இந்த பரிமாற்றத்தின் மூலம் ஜியோசினிமா மிகவும் முன்னோடியாக தொலைக்காட்சியால் வழங்க முடியாத இந்த அம்சத்தை டாடா ஐபில் டிஜிட்டலில் வழங்குவது இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். நுகர்வோர் வாழ்க்கை முறை தற்பொழுது அதிகம் டிஜிட்டல் சேவைகளை நம்பி வாழ்கின்றனர். ஸ்க்ரோலிங் (Scrolling), ஸ்வைப் செய்தல் (Swip),பெரிதாக்குதல் (Zooming) மற்றும் ஸ்க்ரப்பிங் (Scrubbing) செய்தல் போன்ற பல ஸ்கீரின் வகை அம்சங்கள் இந்த டாடா ஐபில் (TATA IPL)- ல் கண்டு மகிழலாம். இந்த சீசனில் TATA IPLஐ எப்படி மக்கள் காண ஏதுவாக நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எங்கள் பிரச்சாரம் முயற்சிக்கிறது. 

 

ரசிகர்களை மையமாகக் கொண்ட இந்த டிஜிட்டல் சலுகைகளின் தொகுப்பின் மூலம், ஜியோ சினிமா (JioCinema) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் வீரர்களை எப்படி, எப்போது, எங்கு வேண்டுமானாலும் காண்பதற்கு தடையில்லா முன்னோடியில்லாத கட்டுப்பாட்டை வழங்கும்,” என்று வயகாம் 18இன் கிரியேட்டிவ் ஹெட் ஆஃப் மார்க்கெட்டிங் (Creative Head of Marketing), ஷகுன் சேடா கூறினார். 

 

“டாடா ஐபில்-லை நாம் பார்க்கும் முறையை ஜியோசினிமா மாற்றப் போகிறது. எங்களின் இந்த பிரச்சாரம், டிஜிட்டல் பொழுதுபோக்கு தளத்தை அதிகபட்சமாகப் பெற குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்லும். ஜியோசினிமா (Jiocinema) அவர்களுக்கு டாடா ஐபில் (TATA IPL)அனுபவத்தை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பல சலுகைகள் வழங்குவதற்கான சிறந்த செயலியாக செயல்படுகிறது,” என்று ஓகில்வி இந்தியாவின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ( Chief Creative Officer) சுகேஷ் நாயக் கூறினார்.

 

டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் டாடா ஐபிஎல் பிரச்சாரம், மற்ற தொலைக்காட்சி அம்சங்களில் இல்லாத பெருமையை கொண்டுள்ளது - இது இலவச ஸ்ட்ரீமிங், முதல் முறையாக 4K ஸ்ட்ரீமிங், 12 மொழிகளில் வர்ணனை, மல்டி-கேம் பயன்முறை, 360 VR, சராசரி ரசிகரின் பார்வை அனுபவத்தை உயர்த்தும் பலவற்றை வழங்குகிறது. ஓகில்வி மூலம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு குரோம் பிக்சர்ஸ் தயாரித்த டிஜிட்டல் இந்தியா கா டிஜிட்டல் TATA IPL என்பது அச்சு (Print), டிஜிட்டல் (Digital) மற்றும் OOH (Out of Home) வழிகளில் 360 டிகிரி பரப்புரையாகும்.

 

டாடா ஐபில் (TATA IPL) இன் 2023 சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனில் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக அனைத்து போட்டிகளும் ஜியோசினிமாவில் நேரலையில் காணலாம். இந்த ஜியோசினிமாவை இலவசமாக பின்வரும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது.

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.