ADVERTISEMENT

தோனி தொடர்ந்து விளையாடுவாரா?? சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...

10:32 AM Aug 12, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

13 வது ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. மார்ச் மாதமே நடைபெற வேண்டிய போட்டி நீண்ட நாளுக்கு பின் நடைபெற இருப்பதால் அனைத்து அணிகளும் ஆர்வத்தோடு தயாராகி வருகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் தோனி 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என கூறியுள்ளார்.

அவர் பேசும்போது, "தோனி ஜார்கண்ட்டில் பயிற்சி எடுத்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் பார்த்தேன். 2020 மற்றும் 2021 போட்டிகளில் கண்டிப்பாக விளையாடுவார். 2022ம் ஆண்டு கூட அவரால் உறுதியாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அவரை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு அணியை திறம்பட வழி நடத்த அவருக்கு தெரியும். அவருடைய பொறுப்பு என்ன என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்" என்றார்.

தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுவரை கேப்டனாக சென்னை அணியை தோனி வழிநடத்திய 10 தொடரில், சென்னை அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT