இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் முடிவை தோனி அறிவிக்க உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தோனி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் பேசிவிட்டதாகவும், இந்த உலகக்கோப்பை முடிந்த பின்னர் விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி குறித்த இந்த புதிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.