Skip to main content

2021 டி20 உலக கோப்பையில் தோனியின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது - ஆகாஷ் சோப்ரா

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

Dhoni

 

 

2021 டி20 உலக கோப்பை போட்டியில் தோனியின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

 

2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடினார். அதன் பின்பு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாத தோனி, தன்னுடைய ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இனி தோனி அணிக்கு திரும்புவதில் சாத்தியமில்லை என்று ஒரு சாரரும், ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிருபிப்பதன் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பி விடுவார் என்று மற்றொரு சாரரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தோனியும் தன்னுடைய சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தோனி குறித்து ஒரு கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "டீ20 உலக கோப்பை இந்தியாவில்தான் நடைபெறுகிறது. தோனி இல்லாமலும் நம்மால் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அவர் இல்லாமல் விளையாடி நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். எனவே அவரது இருப்பு பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

 

தோனி 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.