ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடினார் தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில், சுமார் 10 ஏக்கருக்கு ஸ்ட்ராபெரி, தக்காளி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விளைவித்து வருகிறார்.
இந்நிலையில், தோனியின் பண்ணை வீட்டிலிருந்து துபாய்க்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. ஜார்க்கண்ட் மாநில விவசாயத்துறை உதவியோடு, தோனியின் பண்ணை வீட்டில் விளைந்தவை துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments