இந்தியகிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன்மகேந்திரசிங்தோனி, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வைஅறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடினார் தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தனதுசொந்த ஊரானராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில்விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார்43 ஏக்கர் பரப்பளவு கொண்டபண்ணை வீட்டில், சுமார் 10 ஏக்கருக்கு ஸ்ட்ராபெரி, தக்காளி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விளைவித்து வருகிறார்.
இந்நிலையில், தோனியின்பண்ணை வீட்டிலிருந்து துபாய்க்குகாய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலவிவசாயத்துறை உதவியோடு, தோனியின்பண்ணை வீட்டில் விளைந்தவைதுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.