Skip to main content

டிரம்ப்புடன் போட்டியிட்ட தோனி! - இணையத்தை கலக்கும் வீடியோ! 

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Dhoni competed with Trump!  viral video

 

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கால் இறுதி ஆட்டம் உலகின் நம்பர் 1 வீரர் அல்கரேஸ் - ஸ்வேரேவ் இடையே நேற்று (07-09-2023) ஆர்தர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாகச் சென்றது. தொடர்ந்து போட்டியின் ஓய்வு நேரத்தில் அல்கரேஸ் உட்கார்ந்திருந்த திசை நோக்கி கேமரா திரும்பியது. அந்த ஃபிரேமில், திடீரென முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தென்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

 

இதனைத் தொடர்ந்து, யு.எஸ். ஓபனின் ஒளிபரப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, “நம்மைப் போலவே தோனியும் டென்னிஸ் ரசிகர் தான். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, அல்கரேஸ் - ஸ்வேரேவ் இடையேயான கால் இறுதி ஆட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டார்” எனப் பதிவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸும் தனது ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த ஆட்டத்தின் இறுதியில் அல்கரேஸ் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

 

Dhoni competed with Trump!  viral video

 

தோனி ஐ.பி.எல் 2023ஐ வென்றுவிட்டு, பின்னர் போட்டியின் போது ஏற்பட்ட காயங்களால் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓய்வில் இருந்த தோனி நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நேற்றைய யுஎஸ் ஓப்பன் அரையிறுதி ஆட்டத்தைக் காணச் சென்றுள்ளார். தோனி, யுஎஸ் ஓப்பனை நேரில் பார்ப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக, அல்கரேஸ் - ஜனிக் சின்னர் இடையே நடந்த 2022 யுஎஸ் ஓப்பன் டென்னிஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் தோனி பார்த்துள்ளார். அப்போதும், யுஎஸ் ஒப்பன் ஒளிபரப்பாளர் ட்விட்டரில் இது குறித்து நெகிழ்ந்து பதிவிட்டிருந்தார். அந்த போட்டியிலும் அல்கரேஸ் தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யுஎஸ் ஓப்பனை கண்டுகளித்த தோனி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் அழைப்பால், டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப் பெட்மின்ஸ்டருக்கு சென்று கோல்ப் விளையாடினார். இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் பரவத் தொடங்கியது. தோனியுடன் சென்ற நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டு, “தோனியுடன் கோல்ஃப். எங்களுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி மிஸ்டர். ஜனாதிபதி” எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி இறுதியாக அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா 2020 தேர்தல் தோல்வி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு. சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

“உலகப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது” - டிரம்ப் எச்சரிக்கை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Trump warns There is a risk of world war

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trump warns There is a risk of world war

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.