Skip to main content

அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு என்பது... -மனம் திறக்கும் தேவ்தத் படிக்கல்!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

Devdutt Padikkal

 

 

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில், இளம் வீரர்கள் பலரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களுள் பெங்களூரு அணிக்காக விளையாடிய 20 வயது நிரம்பிய இளம் வீரரான தேவ்தத் படிக்கல் மிக முக்கியமானவர். நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல், 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் குவித்தார். மேலும், அறிமுகமான ஐபிஎல் தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். இந்நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் உடனான தன்னுடைய அனுபவம் குறித்து தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.

 

அதில் அவர், "டிவில்லியர்ஸ் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதே நம் கண்களுக்கு விருந்துதான். இப்போது என்ன செய்கிறோனோ அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என தொடர் முழுவதும் அறிவுறுத்தி வந்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் குவித்திருந்தேன். அந்த போட்டிக்குப் பிறகு எனக்கு டிவில்லியர்ஸ் மெசேஜ் செய்திருந்தார். அதில், நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதை செய்யுங்கள், அனுபவித்து விளையாடுங்கள் என அதில் இருந்தது. அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு என்பது எனக்கு கிடைத்த சிறந்த மரியாதை" எனக் கூறினார்.

 

 

Next Story

பாதி இந்தியனாகிவிட்டேன் - ஓய்வை அறிவித்த ஏபிடி; உருகிய விராட் கோலி!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

virat - abd

 

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிவந்தார். இந்தநிலையில், தற்போது திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

 

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏபி டிவில்லியர்ஸ் பேசும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அதில் பேசும் ஏபி டிவில்லியர்ஸ், "நான் வாழ்நாள் முழுவதும் ஆர்சிபியனாக இருக்கப் போகிறேன்.ஆர்சிபியில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு குடும்பமாகிவிட்டனர். வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஆர்சிபியில் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் உணர்வும், அன்பும் எப்போதும் தொடரும். நான் இப்போது பாதி இந்தியனாக மாறிவிட்டேன், அதற்காக பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

 

இதற்கிடையே ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி, நமது காலத்தின் சிறந்த வீரர் என்றும், தான் சந்தித்ததிலேயே மிகவும் உத்வேகம் தரும் நபர் என்றும்  ஏபி டிவில்லியர்ஸை குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், "நீங்கள் செய்தவைக்காகவும், ஆர்சிபிக்கு வழங்கியவைக்காகவும் பெருமைப்படலாம் சகோதரா. நமது உறவு விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. அது எப்போதும் தொடரும். இது என் இதயத்தைக் காயப்படுத்துகிறது. ஆனால் நீங்கள் எப்போதும் செய்வது போல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சிறந்த முடிவை எடுத்தீர்கள் எனக்குத் தெரியும்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

Next Story

கிரிக்கெட்டுக்கு திடீர் குட் பை - ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஏபி டிவில்லியர்ஸ்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

AB DEVILLERS

 

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிவந்தார். இந்தநிலையில், தற்போது திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

 

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை தக்கவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ட்விட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள ஏபி டிவில்லியர்ஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்தது என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.