Skip to main content

அஷ்வின் காயம் குறித்து டெல்லி கேப்டன் விளக்கம்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Ashwin

 

 

டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அஷ்வின் காயத்தின் நிலை குறித்து, அவ்வணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கமளித்துள்ளார்.

 

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியின்  முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. பின்னர் வெற்றியைத் தீர்மானிப்பதற்கான சூப்பர் ஓவர் நடைபெற்றது. அதில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

 

சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். காயம் ஏற்படும் முன் அஸ்வின் ஒரு ஓவர் பந்து வீசி 2 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அஸ்வின் மீண்டும் களத்திற்கு வந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், போட்டியின் இறுதிவரை அவர் களத்திற்குள் வரவில்லை. இதனால் அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனையடுத்து டெல்லி அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர், "வெற்றி இலக்கு சிறியதாக இருக்கும்போது, விக்கெட் வீழ்த்துவது என்பது மிக முக்கியம். அஷ்வின் பந்து வீச்சு முக்கியமான ஒன்று. அவர் வீழ்த்திய விக்கெட்டுகள்தான் போட்டியை நாங்கள் விரும்பியவாறு மாற்றின. நான் தயார் என அஷ்வின் கூறிவிட்டார். ஆனால் இறுதி முடிவு எடுக்க வேண்டியது மருத்துவக் குழுவினரின் கையில்தான் உள்ளது" எனக் கூறினார்.

 

 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings Prime Minister Modi for Ashwin's record of taking 500 wickets

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அசாதாரண மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை, விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.