team india

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, அடுத்தாக இலங்கையுடன் மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையேயான இருபது ஓவர் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

Advertisment

இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அணியில் இருந்து இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியின்போது காயமடைந்த தீபக் சஹார் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Advertisment

அதேபோல் சூர்ய குமார் யாதவும் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியின்போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பும்ரா அணிக்கு திரும்பியுள்ளதால், தீபக் சஹாருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், சூர்யகுமாருக்கு பதிலாக விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.